Sunday 4 December 2011

சதுரகிரி மலை - 1

சித்தர்பெருமக்கள் மனிதர்களின் கால்படாத, இயற்கை செல்வங்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் தங்கி மனிதகுலத்திற்கு தங்களின் பங்களிப்பை செயல்படுத்திய வரலாற்று நிகழ்வுகள் பல செவி வழியாகவும், பாடல்கள் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் இவைகளுக்கு சான்று இருக்கிறதா என்கிற தர்கக அறிவு யோசிக்கத்தான் செய்கிறது.

அவர்கள் கண்டுபிடித்த பல்வேறுவகையான மூலிகைகள், அவைகளின் பயன்கள் எல்லாம் உண்மைத்தன்மை வாய்ந்ததா என்றால் என்னளவில் சரியானவையே.

சுஜாதா தனது கேள்வி பதில் ஒன்றில் சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டது எதிரி நாட்டவர் சீன எல்லைக்குள் வரக்கூடாது என்பதற்குத்தான். ஆனால் அவர்களுக்கு  எதிர்காலத்தில் வான் வழியாக பறந்து எளிதாக எதிரிகள் தாக்கலாம் என்கிற அளவில் விஞ்ஞானம் வளரும் என நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. தற்போது அந்த பெருஞ்சுவர் காட்சிப்பொருளாகவும், உலக அதிசயமாகவும் மட்டுமே விளங்குகிறது. ஆக கட்டப்பட்ட நோக்கம் வேறு, அது பயன்படுகின்ற நோக்கம் வேறாக இருக்கிறது.

அதுபோல் தற்போதய பொதுநலம் கருதாத சுயநலம் மிகுந்தஅரசியலில், பணம் என்பது பண்டமாற்றத்தின் அடையாளம் என்பது போய், எதற்கு என தெரியாமல் கோடி,கோடியாய்ச் சேர்த்து வைத்து வாழும் தற்காலத்துக்கு சித்தர்கள் தந்த மூலிகைத் தகவல்கள் தேவையானதாக இருக்கிறதா என்பது ஆய்வுக்கு உரியதே.

சித்தர் பெருமக்கள் வாழ்ந்த காலத்தில் உண்ண  உணவு, இருக்க இடம், உடுக்க உடை இவை மட்டுமே அத்தியாவசியமாக இருந்தது. மனம் மாசுபடாமல் இருந்த வெள்ளந்தியான மக்கள் வாழ்ந்த காலத்தில் கல்வி, கேள்வி, கலைகள் வள்ர்ச்சி அடைந்த காலகட்டத்தில், அவர்களின் உள்தேடுதல் அதிகமாகி, இறை சக்தியை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்படி அவர்கள் உணரும் விதத்திற்கு தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்கிற கருணை உள்ளத்தோடு, அன்போடு, தான் பெற்றதை இவ்வையகம் பெறவேண்டும் என்கிற பெருநோக்கோடு, கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற வகையிலும் தான் உணர்ந்ததை, அனுபவித்ததை பாடல்களாக நமக்கு தந்து சென்றனர்.

ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொருவிதம். எனவே இறைஉணர்வு பெற பலவேறு வழிமுறைகள் தேவை என்பதை உணர்ந்து அந்த வழிமுறைகளை தான் கண்டவாறு, அனுபவித்து உணர்ந்தவாறு பலரும் சொல்லி இருக்கின்றனர். 

அந்த வழிமுறைகள் தற்காலத்தில் தேவையா என்றால் அவைகள் அமுதமாக இருக்கலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் தகுதிவாய்ந்த பாத்திரமாக நாம் இருக்கிறோமா எனபதே என்னுள் எழும் கேள்வி.

சித்தர்கள் சொல்லியவை எல்லாம் தகுதியானவரை தரம் உயர்த்துவது, எவரையும் தகுதிப்படுத்தவும் வல்ல படிப்படியான வழிமுறைகள் தாம். இதற்கு நாம் காலிப்பாத்திரமாய் இருக்கவேண்டும். மிகுந்த கணக்கீடுகளோடு சித்தர் பெருமக்களை அணுகும்போது நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே.

சித்தர்களின் மூலிகைக்குறிப்புகள் உண்மைகள் விரவி இருந்தபோதும்,  அவற்றின்  தேவை இப்போது அவசியம் இல்லை என்பதே என் எண்ணம். வெறுமனே உடல்நலம் என்றால் சரிதான். இறைஉணர்வு பெறவேண்டும் என்ற நோக்கில் மனதையும் உடலையும் செம்மைப்படுத்தவென உள்ள மூலிகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான வாழ்க்கை முறையோ, மனநிலையோ நம்மிடம் தற்சமயம் இல்லை எனப் பொதுவாகச் சொல்லலாம்.

சதுரகிரியில் இருக்கும் மூலிகைகளில் சில

கல்தாமரை என்ற மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.இந்த கல்தாமரையின் கிழங்கு அதன் வேர்களில் இருக்கும்.ஒவ்வொரு கிழங்கும் பூசணிக்காய் அளவுக்குப் பெரியதாக இருக்கும்.இந்த கிழங்கை அந்தக் காலத்தில் சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தக் கிழங்கின் மேல் நின்று வானத்தைப் பார்த்தால் அதுவும் பகலில் பார்த்தால் நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் கண்ணுக்குத் தெரியும்.இந்தக் கிழங்கைப் பயன்படுத்தித்தான் கிரக சஞ்சாரத்தை சித்தர்கள் கண்டறிந்தனர்.

இதுதவிர,மனித உடலை வெட்டினால் அந்த வெட்டுப்பட்ட உறுப்பை ஒட்ட வைக்கும் மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.நமது நினைவுகளை மறக்கடிக்கும் மூலிகையும் இங்கே இருக்கிறது.

இறவாத நிலையைத் தரும் மூலிகையும் சதுரகிரியில் இருக்கிறது.சதுரகிரியின் மொத்த மலைப்பரப்பைப் பற்றியும் போகர் 7000 என்ற புத்தகத்தில் பாடல்களாக துல்லியமாக விவரித்துள்ளார்.

உதாரணமாக, அத்தி ஊற்றிலிருந்து கூப்பிடுதூரத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருக்கிறது.சின்னப் பசுக்கடையிலிருந்து அம்பெய்யும் தூரத்தில் சித்தர்களின் குளிக்கும் அருவி இருக்கிறது.இப்படி மொத்த சதுரகிரியையும் பாடல்களாகவே எது எவ்வளவு தூரம் என்பதை வரைபடமாக விவரித்துள்ளார் போகமகரிஷி!!!!








 
 



தொடரும்

அன்புடன்  நன்றி
http://arivhedeivam.blogspot.com
http://ganeshnlk.blogspot.com
http://eternalexpression.wordpress.com/2011/09/22/sathuragiri-yatra-a-divine-experience/
தினமலர் நாளிதழ்

No comments:

Post a Comment