Sunday 4 December 2011

சதுரகிரி மலைப் பயணம் - 2

ஒருமுறை சதுரகிரிமலை ஏற சாதாரணமாக நமக்கு 5 மணி நேரம்  ஆகும். இந்த சுமைதூக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதரணமாக ஏறிஇறங்குகின்றனர்.  சீசன் சமயங்களில் மூன்று முறை கூட ஏறுவார்களாம். முதல் மலை அதிக ஏற்றஇறக்கம் இன்றி சிரமம் இன்றி இருந்தது.  இன்னும் செல்லச் செல்ல  வழியில் தென்பட்டது குதிரை ஊத்து....கூர்ந்து கவனித்தால் இரண்டு பாறைகளுக்கு இடையே கனமான வேர் ஒன்றை கட்டி வைத்து இருக்கிறார்கள். அதைப் பிடித்துக்கொண்டே போகலாம்...

அதைக்கடந்து இன்னும் மேலே செல்லச் செல்ல வழுக்குப்பாறை என அழைக்கப்படும் படிவெட்டிப்பாறை இருந்தது. படி வெட்டாததற்கு முன் வழுக்கியதால் இந்தப்பெயர் வந்திருக்கலாம். படிகள் மிகச் சிறியதாக இருந்தாலும் பயமின்றி நடக்கலாம். இதே போன்ற இன்னும் அதிகம் படிகொண்ட பாறை ஒன்று மேலே செல்லம்போது இருந்தது:))


அந்தப் பாறையிலிருந்து மறுபுறம் கீழே தேங்கி இருக்கும் நீர்....நன்றாக ஓடி ஆடி  குளிக்கலாம். ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டுதான் இறங்க வேண்டும். ஆழம் அதிகம் இல்லை.





அதே பாறை மேலிருந்து கீழ் நோக்கிய பார்வையில்................

 இந்தப்பாறையைத்தாண்டி அடுத்த கால் மணிநேர நடைதூரத்தில் முதல் மலை முடிவுற்று இரண்டாவது மலை ஆரம்பம். இந்த இடத்தை சிறு நீரோடை பாய்ந்து வருகிறது.  வெள்ளம் வரும் காலங்களில் இந்த இடத்தை தாண்ட முடியாதாம். காரணம் சற்றுமுன் பின்னாக எப்படிச் சென்றாலும் சமதளமாக அல்லது ஏறவே முடியாத இடமாக இருப்பதே காரணம்.

நாம் செல்லுகின்ற இடத்தில் ஒரு பெரிய பாறையில் கனமான சங்கிலி ஒன்றைக் கட்டிவைத்திருக்கிறார்கள். அதைப்பிடித்துக்கொண்டு ஏறுவது வழுக்காமல் செல்லவும், சற்று அதிகமாக தண்ணீர் வந்தாலும்  தாண்டிச் செல்லமுடியும்.
 இந்தப்பாறை சற்று நெட்டுக்குத்தலாக மேலேறும். இதிலும் படி வெட்டி வைத்திருக்கிறார்கள். அதன் தூரத்துப்பார்வை கீழே..


கூடவே அந்தப்பாறைமீது மேலேறிச் சென்ற பின் அங்கிருந்த கீழ்நோக்கிய பார்வையில்.....

 சதுரகிரி மலைப்பாதையில்  மலைமீது நாம் சென்று சேரும் வரை இடதுபுறமாக  மலைகளின் இடைவெளிகளில் ஓடிவரும் நீரோட்டம் நம் கண்களில் காட்சியளித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதாவது மலைப்பாதை பெரும்பாலும்  அருவியின் பாதையை ஒட்டியே அமைந்திருக்கிறது.

இந்த அருவியின் இடதுபுறம் அமைந்துள்ள மலை நல்ல உயரம். அதோடு பார்வைக்கு ஒரே பாறையால் ஆன மிகப்பெரிய நந்திபோல படுத்துக்கிடக்கிறது.:)
இந்த மலையைத்தாண்டி, அதாவது கிளம்பியதிலிருந்து சுமார் ஒண்ணேமுக்கால் மணிநேரம் கடந்து அடைந்தது இரட்டைலிங்கம் கோவில். இங்கே வந்தடைந்தால் சுமார் பாதிதூரம் வந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம்.

கோணத்தலவாசல் என்பது சற்றே கடினமான ஏற்றத்தின் ஆரம்பம். Z வடிவமே பெயர்க்காரணமாக இருக்கும்போல..:)).  காரம்பசுத்தடம் என்பது பாறையின்மீது சந்தனமும், மஞ்சளும் கலந்து பூசி வழிபட்டு இருக்கிறார்கள். தலபுராணத்தோடு சம்பந்தப்பட்ட இடம். பாறையில் பசுவைக்கட்டி வைக்கும் வளையமும்  இருந்தது.  அதைத்தாண்டி கால் மணிநேர பயணத்தில் கோரக்கர் குகை.
காரம்பசுத்தடம்
  
கோரக்கர் குகை முன்புறம் அர்ஜீனா நதி அமைதியாக ஓடும் அழகு, கோடை என்பதால் நீர் குறைவு..
கோரக்கர் குகை


சிவபெருமானின் மூன்றாவது கண் - பதஞ்சலி குகை

பதஞ்சலி குகை வாயில்

இரட்டைலிங்கம்
இரட்டைலிங்கம் கோவில்

இரட்டை லிங்கம். இந்த இடத்தை நீங்கள் அடைந்துவிட்டால் மலையின் பாதி தூரத்தை கடந்துவிட்டீர்கள் என அர்த்தம்.

தொடரும்

அன்புடன்  நன்றி
http://arivhedeivam.blogspot.com
http://ganeshnlk.blogspot.com
http://eternalexpression.wordpress.com/2011/09/22/sathuragiri-yatra-a-divine-experience/


1 comment: