மனது பக்குவம் அடைந்தால் புலன்கள் கட்டுப்பாட்டில் இயங்கும். புலன்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். மனிதன் எப்போதும் சாந்த சொருபியாக இருப்பன். அவன் உதட்டில் எப்போதும் புண் சிரிப்பு தவழும். அமைதியான முகம். எத்தகைய பிரச்சனையானாலும் பரபரப்பின்றி நிதானமாகக் கையாண்டு வெற்றி பெரும் திறன் பெற்றவனாகிறான்.உணர்வு கட்டுப்பாட்டில் இருப்பவன் திறன்பட ஆய்ந்து வெற்றி காணும் வல்லபவம் உள்ளவனாக இருக்கிறான். உணர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்து கொள்பவனுக்கு தீமைகள் நெருங்காது. நல்ல ஆயுலும் நல்ல ஆரோக்கியமும் பெற்று இருப்பன்.
உணர்வுக்கும் இந்த ஓட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.வழியில் நடந்து செல்லும் போது எதிர்பாரத விபத்தைக் காணுகின்ற போது இரத்தம் உறைந்துவிடும் போன்ற உணர்ச்சி ஏற்படுகின்றது.ஒருவன் சாடும் போது சாடுதலை மனம் ஏற்றுக் கொள்ளாமல் கோப உணர்ச்சி மேலோங்கி திரும்பி அவனை சடா வேண்டும் என்கின்ற ஆத்திர உணர்வு தோன்றுகிறது. இதே போல சமுதயத்தில் அலுவலகத்திலும் சரி உறவினர்கள் நண்பர்கள் மதத்திலும் சரி பல்வேறு சம்பவங்களின் மூலம் மனித மனமானது கோப,தாப,இன்ப,துன்பங்களுக்கு ஆளாகிறது.
No comments:
Post a Comment